உண்ண உணவில்லாமல் தினமும் இறக்கும் பல ஆயிரம் குழந்தைகளுக்காய் அழும் உள்ளமா நீங்கள்? அப்படி ஆயின் உங்கள் பொற் பாதங்களை முத்தமிடும் உங்கள் சேவகன் நான்.. நான் என்றும் வாழ்வேன் உங்களுக்காய் உங்களோடு..,
Friday, January 5, 2018
புன்னகை
Thursday, November 10, 2011
கடைசியின் தொடக்கம்..:
கடைசியின் தொடக்கம்..:
எனக்கும், பனத்திர்க்குமான இடைவெளி..
கூடிகொண்டே இருக்கிறது....!!
முயலுகையில் மூடிய பாதைமுழுக்க...
நான் முட்டியதால் சிந்திய ரத்தமே..!!
கட்டி அணைக்க ஆதரவு தேடுகையில்...
எட்டி உதைக்கும் எஞ்சிய நெஞ்சங்கள்...!!!
என்னடா வாழ்க்கைஎன்று ஏங்கி நிற்கையிலே...
கைநீட்டி நகைக்கிறது... குறிக்கோளும், கனவுகளும்...!!!
கனவுகளை கலைக்கவேண்டி கண்கலங்கி நிற்கையிலே...
காதோடு கேட்கிறது...
இன்னும் ஒருமுறை முயன்று பாறேன்..!!!!
உங்கள் சேவகன், ..laajee..,
Tuesday, August 16, 2011
வளர்ந்தது வலிக்கிறது..!
பிறந்தது முதலே தொட்டு பார்த்த மரம்.
அம்மா அடிக்க வரும் ஒவ்வொருமுறையும்,
அதை சுத்தி ஓடியே தப்பித்த நாட்கள்.
மழை விட்டு தேங்கிய சொட்டு நீரை,
குழுக்கியதும் கொடுத்த இனியவன்.
தேன்கூடு அண்ட தேன் எடுக்க ஏறி
உடைந்த கிளையில் உணர்ந்த ரத்தம்.
பருவங்கள் மாறியபின்
பரிவுகளும் மாறின பார்வையில்.
வெகுநாட்கள் கழிந்து வீடு செல்கையில்,
நான் ரசித்த மரம் இன்றி
வெறுச்சோடி கிடக்கிறது வாசல்..!
விரக்தியுடன் அம்மாவை கேட்க,
போன செமஸ்டர் பணம்
அந்த மரத்த வித்துதண்டா கட்டினோம்..!
வெளிவந்து வெம்புகையில் உணர்ந்தேன்
அடிக்க அம்மாவும் இல்லை
அரவணைக்க மரமும் இல்லை
வேர்மட்டும் இன்னும் மண்ணிலே
எனக்கு மட்டுமே தெரிந்த
காய்ந்து போன ரத்தத்துடன்...!
தெருவில் போறவர்களின் ஓசை,
இன்னும் ஒலித்தபடியே..
என்னமா வளந்துட்டான்ல...
வேப்பமரத்து வீட்டு புள்ள...!!!
உங்கள் சேவகன்..,
..laajee ..,
Friday, June 3, 2011
Saturday, March 27, 2010
நீ என்றால் காதல்..!!!
பலரும் பலவற்றை சொல்கிறார்கள்...!!!
வென்றவர்களுக்கு காதல் என்றால்
சந்தோஷம்..!!
தோற்றவர்களுக்கு காதல் என்றால்..
கண்ணீர்..!!!
காதலிக்க தெரிந்தவர்களுக்கு
காதல் என்றால் அழகு..!!!
காதலிக்கப் படுபவர்களுக்கு ...
காதல் என்றால் சொர்க்கம்...!!
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு...
காதல் என்றால் புன்னகை..!!!
புன்னகைக்க தெரிந்தவர்களுக்கு
காதல் என்றால் அற்ப்புதம்..!!!
அன்பு தேடுவோருக்கு
காதல் என்றால் அம்மா...!
அம்மாவை தேடுவோருக்கு..
காதல் என்றால் கடவுள்..!!
உலகின் பார்வையில்
காதல் பலவிதம்தான்...
ஆனால் எனக்கு என்றுமே..
..காதல் என்றால் நீ...
நீ என்றால் காதல்..!!!
.. உங்கள் சேவகன்..,
..laajee..,
அம்மா.!
..
கடவுள் இல்லை என்று
யார் இங்கு சொன்னாலும்
கடவுளை நம்ப ஓரு வாய்ப்பு தந்த
கடவுள் அது அம்மா..,
அம்மா, அம்மா என்று
ஆசையாய் எத்தனைமுறை அழைத்தாலும்
பாசமாய் புன்னகை சிந்தும் ஓரு
அதிசயம் அது அம்மா.,!
அனாதைகள் என்று ஒதுக்கிய
உலகம் மறந்து உறங்கையிலே
கனவின் மீதியாய் கண்கலோர கண்ணீரில்
என்றும் ஆதரவாய் ஓரு சொந்தம் அது அம்மா..!!
தோல்வியால் நாம் அழுகையிலேயே மடிசாய்த்து..
உன்னால் மட்டுமே முடியும் எனசொல்லி..
நம் கண்ணீர் துடைத்தபடியாய் கண்ணீர் சிந்தும்...
கவிதை அது அம்மா..,
என்றேனும் முதியோர் இல்லம்வரும் பிள்ளைக்காய்...
அழுத மனம் முழுக்க ஆசிதந்து...
குழந்தையாய் புன்னகைத்தபடியே....
குதூகலிக்கும் குழந்தை அது அம்மா..,
உங்கள் சேவகன்...
..laajee..,
தனிமை பிடித்திருக்கிறது...!
...
தனிமை பிடித்திருக்கிறது
மனம் விட்டு சிரிக்க..
இதயம் திறந்து அழுக...
காற்றோடு பேச...
மழையோடு நனைய...
யாருமற்ற தனிமை பிடித்திருக்கிறது..!!!
..
பழைய நினைவுகளோடு
பயணம் செய்ய...
பூக்களின் நறுமணம் நுகர.....
அழகான பட்டாம்பூச்சி பிடிக்க..
அன்பான அம்மாவை நினைக்க...
யாருமற்ற தனிமை பிடித்திருக்கிறது..!!!
..
புன்னகைக்கும் குழந்தையை ரசிக்க...
ஆசையாய் கவிதை எழுத....
காதலின் ஆழம் அறிய...
என்னோடு துணை இருக்க...
எனக்கான தனிமை பிடித்திருக்கிறது..!!!
உங்கள் சேவகன்...
..laajee..,
Wednesday, March 17, 2010
அம்மா என்றால் தெய்வம்..!
பலவற்றை பங்கிட
பலர் கிடைத்தார்கள்..
என் பசியை பங்கிட
நீ மட்டும்தான் கிடைத்தாய்..!!
என் வாழ்கை முழுதும்
புன்னகை என்ற சொல்
எங்கெல்லாம் உண்டோ..
அங்கெல்லாம் உன் பெயர் இருக்கும்..!!
அழச்சொல்லி ரசித்த
உள்ளங்களுக்கு மத்தியில்..
சிரிக்க சொல்லி
அழுதது நீ மட்டும்தான்..!!
உலகோடு நான் கொண்ட காதலுக்கு
நான் தரும் பரிசு என் உயிர்...
உன்னோடு நான் கொண்ட காதலுக்கு
நான் தரும் பரிசு அழகு உலகம்..!!!
மரணமும் ஓரு வாய்ப்புதான்
உன் மடிதனில் நிகழ்ந்தால்..!!!
அன்றொரு நாள் எனக்காய் நீ அழுதாய்
உனக்காய் நான் அழுதேன்
நமக்காய் காதல் சிரித்தது..!!!
உனக்காய் நான் எழுதிய
ஒவ்வொரு கவிதையும்
என் கண்ணீர்பட்டு அழிந்துவிடுகிறது
புன்னகையை தாங்கியபடியே...!!!!
உன்னைகாணும் முன்புவரை
கண்ணீர்த்துளிகளை அதிகம் பார்த்த
என் டைரியின் பக்கங்களில்,
புன்னகையே வழிகிறது
உன்னை கண்ட நாள் முதல்..!!!
என் மரணத்திற்க்காய்
நீ அழுவாய் என்றால்...
அது உனக்கு தெரியாமலே
நிகழ பணிப்பேன்..!!!!
உங்கள் சேவகன்..,
..laajee..,
Saturday, January 9, 2010
கொஞ்சம் மழை..நிறைய புன்னகை..!!!
சிரித்தபடி பார்த்திருந்தாலும்....
இன்றும் பூமியில் விழும்
ஒவ்வொரு மழை துளியும்
நினைவுபடுத்துகிறது
நீ எங்கேயோ சிரித்து கொண்டிருப்பாய் என்பதை...!!!
ஏனோ தெரியவில்லை .,
நான் மழையின் ரசிகனா..
இல்லை தேவதையின் ரசிகனா...
ஏன் எனில் நீ சிரிக்கும் ஒவ்வொரு முறையும்
நான் நனைகிறேன்..!!!
நீ நனைகையில் சிந்திய புன்னகையை
எனக்கு தந்துவிடும் என்ற
நம்பிக்கையில்தான் நானும்
நனைகிறேன் ஒவ்வொரு மழையிலும்...!!!
நனைந்தபடியே மழையை
ரசிக்கும் உனையும்...
நனைத்தபடியே உன்னை
ரசிக்கும் மழையையும்..
சிரித்தபடியே படம் எடுக்கிறது மின்னல்..!!
எங்கோ உன் புன்னகையை
ரசித்த காற்றை
இங்கே நான் சுவாசிக்கிறேன்
புன்னகைத்தபடியே..!!!
குழந்தையின் முதல் அம்மா..
எத்தனை அழகோ
அத்தனை அழகாய் இருந்தது
உன் முதல் புன்னகை...!!!
எங்கே கற்றுவந்தாய்
இத்தனை அழகாய் புன்னகை செய்ய ..!!!
அதிகாலை சூரியன் உதயமே
அழகான சிவப்பு என நினைத்திருந்தேன்
வெட்கத்தில் உன் கன்னம்
சிவந்ததை காணும் முன்புவரை..!!!
..
நீ இல்லா நேரத்திலும்
காதல் செய்வதற்காய்
நீ கொடுத்த பரிசில் மிச்சம் இருக்கிறது
நமக்கான பழைய புன்னகை..!!!
உங்கள் சேவகன்..,
..laajee..,
Sunday, September 20, 2009
காதல் என்றால் நீ..!
பாடத்தையும் மீறி
திருடிவிடுகிறேன் பிடித்த அவளின்
அழகிய புன்னகையை...!
உற்சாகமாய்தான் விடிகிறது
உன் உளறல் ரசித்த
உனக்கு பிடிக்கும் என்பதால்
கவிதையை ரசிக்கிறாய்..
எனக்கு பிடிக்கும் என்பதால்
உன்னை ரசிக்கிறேன்..!
மழலை புன்னகை பிடிக்கும்
என்று சிரிக்கிறாய்
உன் புன்னகை பார்த்தவாறு
மழலையாகி போகிறேன்..!
நீ அழகாய் சிரிக்கிறாய்
என்றதும் வெட்கபடுகிறாயே..
அழகாய் வெட்கபடுகிறாய் என்றால்
எப்படி சிரிப்பாய்..!!
புன்னகைக்கிறேன் என்பதால்
என்னை பிடிக்கும் என்கிறாய்..
உனக்குபிடிக்கும் என்பதால்
புன்னகைக்கிறேன்..!
என் வாழ்வின் அகராதி முழுதும்
காதல் என்றால் நீ
நீ என்றால் காதல்..!
உன் அழகின் விளக்கம் கேட்டிருந்தாய்..
உலகின் மிகச்சிறந்த பூவும்
தோற்றுபோகும் உன் அழகில் என்று
சொன்னவுடன் சிரிக்கிறாய் வெட்கமுடன்...
அய்யோ !! நீ இப்படி சிரித்தால்
உலகமே தோற்றுவிடும் அல்லவா..!
சொன்னவுடன் எப்படி சிரிக்கிறாய்..!
தோல்விகளுக்காய் வருந்தும் நான்
முதல் முறை சிரித்தேன்
உன்னிடம் தோற்றபோது..
இப்படி காதல் செய்யும் உன்னிடம்
எப்படி தோற்காமல் போக..?
உன் கண்ணீர் பிடிக்கும்
என்றதும் அதிர்கிறாயே..
அது புன்னகையால் மட்டுமே
வரும் கண்ணீர்
என்று சொல்லும் முன்...!
உங்கள் சேவகன்..,
..laajee..,
Thursday, September 3, 2009
நிஜத்தின் நிழலாய் கண்ணீர்..!!

முடியாமலே விடிந்த..
கனவுகளின் சுவடுகளாய்...
கன்னங்களில் கண்ணீர்..!
மொத்த வாழ்கையையும் பரிசளித்தும் ..
எட்டி உதைக்கும் பிள்ளைகளுக்காய்...
தாய்மையுடன் வேண்டிநிற்கும் கண்ணீர்..!
ரசித்த காதலையும்
பெற்றோருக்காய் துறந்து வாழ்வோரிடையே...
காதலுடன் வாழ்த்தி வாழும் கண்ணீர்..!
குழந்தையில் கிடைக்காததற்க்காய் கலங்கி...
கிடைத்ததற்க்காய் மகிழ்ந்து நிற்கையில்..
அடையாளம் அறிந்தமையாய் கண்ணீர்..!
பிரிதலின் ஆழத்திலும்...
புரிதலின் அன்பிலும், இனம் புரியாமலே..
இயல்பாய் உதிர்க்கும் கண்ணீர்..!
உலகமே வியந்து போற்றும் நமக்கான வெற்றியால்...
அன்னையின் கண்களில் மலரும்...
சந்தோஷ சலனமாய் கண்ணீர்..!
எதிர்பார்த்த வெற்றியிலும்...
எதிர்பார்க்கா ஏமாற்றத்திலும்..
எட்டிவரும் எண்ணம் புரிந்த கண்ணீர்..!
பரிச்சயமற்ற பயன நாட்களில்..
காற்றுகவரலாய் நுழைந்த தூசியால்...
நோக்கமற்ற ஏதுமாய் கண்ணீர்..!
சந்தோஷமோ, வருத்தமோ..
அமைதியோ, ஆராவாரமோ...
ஒரே சுவையில் கண்ணீர்..!
வெற்றியோ, தோல்வியோ...
வருகையோ, பிரிவோ....
ஒரே நிறத்தில் கண்ணீர்..!
சிரிக்கையில் விருப்பமாய்...
அழுகையில் வெறுப்பாய்...
பல பரிணாமங்களின் மொத்தமாய் கண்ணீர்..!
உனக்கும் எனக்கும் பொதுவாய்..
உலகம் முழுக்க உதிர்ந்தபடியாய்..
நினைவுகளின் வெளிப்பாடாய்...
நிஜங்களின் நிழலாய் கண்ணீர்...!!!
பிறக்கையிலும்,இறக்கையிலும்..
பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும்..
சுகங்களையும், சோகங்களையும்...
சுமந்தபடியே.....
என்றும் எப்போழுதுமாய்...
நமக்கான கண்ணீர்..!!!
உங்கள் சேவகன்..,
..laajee..,
Wednesday, August 26, 2009

நேற்றைய நாம்., இன்றைய நாம், நாளைய நாம்..,
எல்லாமே நம்மால்தான், நம்மோடுதான்..,
மனிதனாய் நாம் பிறந்திருக்கிறோம்..,
இதைவிட ஓரு பெரிய வாய்ப்பை எங்கு தேட....
இத்தனை பெரிதான வாய்ப்பு......
மற்றவைகள் எத்துனை பெரிதாகும்..!!
காகித பூக்கள்போல் பறந்துவிடும் ....,
மறக்க முடியா இளமை காலங்கள்....!!
இன்று உழைக்காமல் என்று தழைக்க???
நம்மை ஈன்றது அன்னை என்பது உண்மைதான்.....,
நாம் மனிதர்கள் என்பது உண்மைதான்...,
அனைவருக்கும் சமமாய் நேரம் என்பதும் உண்மைதான்...,
நாம் மரிக்க போவதும் உண்மைதான்....,
சாதனை சக்தியை பறிக்க போவதும் உண்மைதான்...!!!
ஓரு முறை சோற்றுக்காக வாழாமல்....,
வாழ்க்கைக்காக வாழலாம்....!!!
வாழ்க்கையோடு வாழ்க்கையாக....!!!!
உங்கள் சேவகன்...,
..laajee..,
Saturday, July 25, 2009
உடையும் தெய்வத்தின் குழந்தைகள் (அனாதைகள்)...
.bmp)
பலர் ருசி அறியும் காலத்தில்,
அவர்கள் பசி அறிகிறார்கள்!
பலர் சுகம் அறியும் காலத்தில்,
அவர்கள் சுமை அறிகிறார்கள்!
பலர் சினம் அறியும் காலத்தில்,
அவர்கள் குணம் அறிகிறார்கள்!
பலர் சோகம் அறியும் காலத்தில்,
அவர்கள் லோகம் அறிகிறார்கள்!
இப்படி அனைத்தையும் பலருக்கு முன்னமே அடைந்த அவர்களால்,
பலர் பெற்ற விலைமதிக்க முடியா..., அன்னை என்ற,
தெய்வத்தின் உடைக்கமுடியா பாசத்தை மட்டும்...
அடைய முடியாமல் உடைகிறார்கள் பல துளியாய்!!!!!!!??
(என்னுடைய இந்த 3 வது கவிதையை ஆதரவற்ற என் சகோதர, சகோதிரிகளுக்கு சமர்பிக்கிறேன்)...,
உங்கள் சேவகன்,
..laajee..,
..வீடு..!!!

தவழும் வயதிலிருந்தே...
தடுக்கி விழுந்து, எழுந்த வாசல்!!!
அன்னையின் சேலை நுனி பிடித்து
நடந்த, நடக்க பழகிய முற்றம்!!!
சகோதரமாய் சண்டையிட்டு சில அழுகை...
பல சிரிப்பு கண்ட திண்ணை!!!
புன்னகை, காதல், சோகம்...எத்தனையோ????
அத்தனை முகங்களையும் கண்ட கூடு!!!
பிரிந்து எங்கு சென்றிருந்தாலும்,
வருகையை புரிந்து குதூகலிக்கும் கோவில்!!!!
அசதியான நேரத்தில் அண்ணாந்து பார்க்கையில்
அறியும் ஓட்டை விழுந்த கூரையால்
வசதியாக வாழ கனவு கொடுத்த பள்ளி!!!!
திருமணம் முடிந்து செல்லும் மகளிர்க்காய்,
வருத்தமாய் வெறிச்சமுகம் காட்டும் சார கோபுரம்!!!!
நாம் மடிந்து போக நினைத்தாலும்
இடிந்து போகாத ஒரே சொந்தம்..
நேசம் , பாசம் மறவாத பந்தம்!!!!
அதுதான் நமக்கான வீடு!!!!!
உங்கள் சேவகன்,
..laajee..,
மரணம் கொண்ட மணங்கள் வேண்டாமே...!!!

ஒத்த புள்ள பெத்து போட்டு
நித்தம் கனவு தானும் கண்ட..
ஒத்த புருசன் போன பின்னே
புள்ள மேல உசிர வச்சி
நானும் கனவு நாலு கன்டேன்!!!
அண்ட வீடு துணி துவச்சி
ஆச்சியம்மா ஆட்ட மேச்சி
வந்த காசில் வலி மறக்க
அடுக்கு மல்லி சூடிவிட்டு
புள்ள உன்ன படிக்க வச்சேன்!!!
ஆச காட்டி அழச்ச பய
பின்ன நீயும் ஓடிபோன...!!
பாசம் தணிந்து போன பின்னே...
மோசம் போயி வந்தியடி!!
நித்தமு நீ அழுவுறத
பெத்த வயிரு தாங்கலயே..!!
தத்தி வந்து கேட்ட என்ன,
செத்து போக சொன்னியம்மா!!!!
கஞ்சி கூட குடிக்காம
நீ அழுவ நான் பார்க்க
நெஞ்சி தண்ணி வத்தி போயி.
நானும் இப்ப செத்து போறேன்...!!!
காலந்தள்ளி புத்தி வந்தா
பெத்த கனவ நனவாக்கு... அப்ப
சிரிச்ச ஊரு கண்ணு பட்டா
சுத்திபோட யாரிருக்கா...???
உங்கள் சேவகன்,
..laajee..,
வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது..!!!!

பகிராமலே மறைந்து போன
பல நேர புன்னகை..!!!
நிரம்பாமலே சுருங்கி போன.
பசித்த வயிறு..!!!
துடைக்காமலே விழுந்துவிட்ட
உடைந்த கண்ணீர்..!!!
அடுத்த நாள் நீடிக்காமலே போன
அழகாய் பார்த்த அன்பு..!!!
எழுதாமலே விட்டு போன
பிடித்த பல பெயர்கள்..!!!
சொல்லாமலே தங்கிவிட்ட
உண்மை காதல்கள்..!!!
இப்படி எதற்கும் தடைபடாமலே
நீண்ட லட்சிய பாதை..!!!
வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது!!!
உங்கள் சேவகன்,
...laajee..,
பிச்சை மனிதன்..!!
பட்டினியோடு உறங்க முயன்று....
பசியோடு அதிகாலை எழுந்து
ருசி மறந்து தன்னீர் பருகி..
பலர் வீட்டு எச்சத்தை நம்பி
இச்சையாய் ஆசை கொண்டு..
தெரியாத தாயை வாய் நிறைய கூவி
மிட்சமாய் கிடைத்ததை
மிட்சமில்லாமல் உன்ன நினைத்து...
வாலாட்டி உரசி நிற்கும் தெருவோர நாய்க்கிட்டு
நானும் உண்டதுண்டு..!!!
காலத்திற்கு பிட்சையாய்
இறந்து போகும் எனக்காய்
தினம் கண்ட தெருவும் வருந்தாது....
நான் கானா தாயும் வருந்தாது....
ஓரு வேலை அந்த நாய் வருந்தலாம்..
பசிக்கு உதவ நாதியற்ற நாட்களில்...
பிச்சை மனிதன் என்னை நினைத்து..
அன்று அது குறைக்கலாம்...
எனக்காய் ஒருமுறை...
அம்மா என்று அதன் மொழியில்..!!!!
உங்கள் சேவகன்..,
..laajee..,
ஐந்து ரூபாய் நாணயம்::

யாரோ தொலைத்திருந்தார்கள் !!!!
அவர்களுக்கு அது காசுதான் ......ஆனால்,
கண்டெடுத்த எனக்கு அதிஷ்ட சந்தோஷம் ஆனது!!!
என் அந்த நிமிட புன்னகையில் தொலைத்தவர் வாழ்ந்திருந்தார்....
உண்மைதான் உணர்ந்தேன்!!!!
நானும் தெரிந்தே தொலைக்கிறேன் நாணயங்களை.!!
யாரேனும் புன்னகைக்க கூடும்......
அதில் நான் வாழக்கூடும்....!!
பார்க்க ஆசைதான்...
அவரின் புன்னகையை,
அதில் நான் வாழ்வதை!!!
ஒருவேளை புன்னகை பொய்த்து...
நம்பிக்கை மெய்க்காமல் போனால்???
நம்புகிறேன் தொலையும் நாணயங்கள் பிறரின் புன்னகைக்கே!!!!
நான் விட்ட நாணயம் உங்களில் யாரையேனும்....
புன்னகை படுத்தும் என்ற நம்பிக்கையில்.........,
நடக்கிறேன் திரும்பி பார்க்க மனமில்லாமல் !!!!!!
எனக்கான சந்தோஷ நாணயத்தை தேடி!!!!!!
யாரேனும் தொலைதிருப்பீர்கள் என்ற ஆசையில் !!!!
உங்கள் சேவகன்..
..laajee..,
வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது:

தன்னை மிதிபோர்க்கும் நேசத்துடன்
நறுமணத்தை பரிசளிக்கும் மலர்கள்..!!
தன் மீது மோதி விளையாடுவோர்க்கும்
திறந்து வழிகாட்டும் வெற்றி வாசல்..!!
கோபத்தை கொட்டித் தீர்ப்போருக்கும்
அழகிய புன்னகையை அன்பளிக்கும் குழந்தைகள்..!!!
வாய்ப்பை வரவேற்காமல் வசை பாடுவோர்க்கும்
வாழ வழிகாட்டும் வாழ்க்கை..!!!
தன்னை திட்டித் தீர்ப்போருக்கும்
அதிசய அறிவாய் அனுபவம் தரும் தோல்விகள்...!!!
சேர்ந்து வாழாமல் போன காதலர்களுக்கும்
கவினயமாய் கவிதை தரும் காதல்கள்..!!!
வெட்டி வீழ்த்திய மனிதர்க்கும் உண்டுமகிழ
சுவையாய் உணவுதரும் உயிர்விட்ட உயிர்கள்..!!!
தான் கிழியப்போகிறோம் என்று தெரிந்தும்
நினைவுகளை நிரம்ப கொண்டுதரும் கடித உறைகள்..!!!
தனை தள்ளி ஒதுக்கிய பிள்ளைகளுக்க்காகவும்
கடவுளிடம் கருணை கேட்க்கும் தாய்கள்..!!!
அடடா!! கோபமற்ற தருணங்களில்
வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது.....
எதிர்பாராமல் கிடைக்கும் பரிசுகள் போல..!!!
உங்கள் சேவகன்..,
..laajee..,