Sunday, September 20, 2009

காதல் என்றால் நீ..!

திருடவே கூடாது என்ற

பாடத்தையும் மீறி

திருடிவிடுகிறேன் பிடித்த அவளின்

அழகிய புன்னகையை...!

உற்சாகமாய்தான் விடிகிறது

உன் உளறல் ரசித்த

ஒவ்வொரு இரவும்..!

உனக்கு பிடிக்கும் என்பதால்                      
கவிதையை ரசிக்கிறாய்..
எனக்கு பிடிக்கும் என்பதால்
உன்னை ரசிக்கிறேன்..!

மழலை புன்னகை பிடிக்கும்
என்று சிரிக்கிறாய்
உன் புன்னகை பார்த்தவாறு
மழலையாகி போகிறேன்..!                                       

நீ அழகாய் சிரிக்கிறாய்                                             
என்றதும் வெட்கபடுகிறாயே..
அழகாய் வெட்கபடுகிறாய் என்றால்
எப்படி சிரிப்பாய்..!!

புன்னகைக்கிறேன் என்பதால்
என்னை பிடிக்கும் என்கிறாய்..
உனக்குபிடிக்கும் என்பதால்
புன்னகைக்கிறேன்..!

என் வாழ்வின் அகராதி முழுதும்
காதல் என்றால் நீ
நீ என்றால் காதல்..!

உன் அழகின் விளக்கம் கேட்டிருந்தாய்..
உலகின் மிகச்சிறந்த பூவும்
தோற்றுபோகும் உன் அழகில் என்று
சொன்னவுடன் சிரிக்கிறாய் வெட்கமுடன்...
அய்யோ !! நீ இப்படி சிரித்தால்
உலகமே தோற்றுவிடும் அல்லவா..!                
சொன்னவுடன் எப்படி சிரிக்கிறாய்..!

தோல்விகளுக்காய் வருந்தும் நான்
முதல் முறை சிரித்தேன்
உன்னிடம் தோற்றபோது..
இப்படி காதல் செய்யும் உன்னிடம்
எப்படி தோற்காமல் போக..?

உன் கண்ணீர் பிடிக்கும்
என்றதும் அதிர்கிறாயே..
அது புன்னகையால் மட்டுமே
வரும் கண்ணீர்
என்று சொல்லும் முன்...!


உங்கள் சேவகன்..,
..laajee..,

Thursday, September 3, 2009

நிஜத்தின் நிழலாய் கண்ணீர்..!!




முடியாமலே விடிந்த..
கனவுகளின் சுவடுகளாய்...
கன்னங்களில் கண்ணீர்..!

மொத்த வாழ்கையையும் பரிசளித்தும் ..
எட்டி உதைக்கும் பிள்ளைகளுக்காய்...
தாய்மையுடன் வேண்டிநிற்கும் கண்ணீர்..!

ரசித்த காதலையும்
பெற்றோருக்காய் துறந்து வாழ்வோரிடையே...
காதலுடன் வாழ்த்தி வாழும் கண்ணீர்..!

குழந்தையில் கிடைக்காததற்க்காய் கலங்கி...
கிடைத்ததற்க்காய் மகிழ்ந்து நிற்கையில்..
அடையாளம் அறிந்தமையாய் கண்ணீர்..!

பிரிதலின் ஆழத்திலும்...
புரிதலின் அன்பிலும், இனம் புரியாமலே..
இயல்பாய் உதிர்க்கும் கண்ணீர்..!

உலகமே வியந்து போற்றும் நமக்கான வெற்றியால்...
அன்னையின் கண்களில் மலரும்...
சந்தோஷ சலனமாய் கண்ணீர்..!

எதிர்பார்த்த வெற்றியிலும்...
எதிர்பார்க்கா ஏமாற்றத்திலும்..
எட்டிவரும் எண்ணம் புரிந்த கண்ணீர்..!

பரிச்சயமற்ற பயன நாட்களில்..
காற்றுகவரலாய் நுழைந்த தூசியால்...
நோக்கமற்ற ஏதுமாய் கண்ணீர்..!

சந்தோஷமோ, வருத்தமோ..
அமைதியோ, ஆராவாரமோ...
ஒரே சுவையில் கண்ணீர்..!
வெற்றியோ, தோல்வியோ...
வருகையோ, பிரிவோ....
ஒரே நிறத்தில் கண்ணீர்..!

சிரிக்கையில் விருப்பமாய்...
அழுகையில் வெறுப்பாய்...
பல பரிணாமங்களின் மொத்தமாய் கண்ணீர்..!

உனக்கும் எனக்கும் பொதுவாய்..
உலகம் முழுக்க உதிர்ந்தபடியாய்..
நினைவுகளின் வெளிப்பாடாய்...
நிஜங்களின் நிழலாய் கண்ணீர்...!!!

பிறக்கையிலும்,இறக்கையிலும்..
பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும்..
சுகங்களையும், சோகங்களையும்...
சுமந்தபடியே.....
என்றும் எப்போழுதுமாய்...
நமக்கான கண்ணீர்..!!!

உங்கள் சேவகன்..,
..laajee..,