Saturday, March 27, 2010

விவசாயம் ஓரு பார்வை:


விவசாயம் ஓரு பார்வை:

...
   பறவைகள் கவி பாடும் கீஷ்வானம் சிவந்த ஓரு காலை பொழுது, அதோ சற்று தொலைவில் எனது விவசாய தோழர் கையில் மண்வெட்டியுடனும்,
மனதில் கனவு என்ற கனத்துடனும் உடலில் வறுமையின் கோடுகள் தெரிய தனது வயலை நோக்கி நடந்து செல்லும் சோகம்! மண்வெட்டியை ஆயத்தமாக்கி வயலில் இறங்கியவரின் கைகளில் சிறிது நடுக்கம் கண்களோ நிரம்பி இருந்தது நீரால், மண்வெட்டியை கீழே வைத்து விட்டு கலக்கத்துடன் அமரும் தோழர் நினைவுகளை சற்று பின்னோக்கி செலுத்துகிறார்..,!

 
கடந்த வருடம் இதே வயலுக்காக உரம் வாங்க வைக்கப்பட்ட மனைவியின் நகையோ அடகு கடையில் கழுத்து வரை மூழ்கிவிட்ட நிலையில்!
அது பத்தாமல், அடுத்த அறுவடையில் தருகிறேன் என கூறி ஊர் வெல்லாமயிடம் பணம் வேறு வாங்கியாயிற்று!!
இவை போதாது என்பது போல், மகனின் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய 3 மாத பாக்கி பணம், அவன் இரண்டு நாளாய் பணம் கேட்டு வீட்டில்!! இருந்த தாலியையும் கடந்த முறை வைத்து பணம் கட்டினதால் வேறு வழி இல்லாமல் மனைவியும் அமைதியாய் ,,..,!
அனைவரும் அவர்களுக்குக்கானவற்றை இவரிடம் புலபியயிற்று! பாவம் இவர் யாரிடம் புலம்புவார் கடவுளிடமா? 

 
               வேலை முடிந்து வீடு திரும்புகையில் கைகளால் கண்களை துடைத்தபடியே ஓரு கலைத்த நடை,,!
வீட்டில் மனைவி,மகன் இருவரும் ஏக்க பார்வையுடன் இவரின் பொன் வார்த்தைக்காக... பாவம் விவசாயி, வானம் பொய்த்ததிர்க்கு அவர் என்ன செய்வார்?
விளைந்த நெல்லில் கடனும், மகனின் கட்டனுமும் முடிந்துவிடும்!
மனைவிக்கும், உண்பதற்கும் என்ன செய்வதாம்?
யோசனையுடன் மனைவி சாப்பிட கூப்பிடுவது கூட கேட்க்காமல் நடக்கிறார், சோற்றுக்காக அடுத்தவர் வயலில் வேலை செய்ய....,
அனைத்து நம்பிக்கையும் பொய்த்து விட்ட அவர்க்கு கடைசியான மிச்சம், மகன் எப்படியும் நம்மை காப்பாற்றுவான் என்பதுதான்!!
          அவர் உயிர் மிஞ்சி இருப்பதும் அந்த நம்ம்பிக்கயால்
தான்!!!!!,



                                                                               உங்கள் சேவகன்,

                                                                                          -laajee..,

நீ என்றால் காதல்..!!!


காதலுக்கு விளக்கம் என்று
பலரும் பலவற்றை சொல்கிறார்கள்...!!!

வென்றவர்களுக்கு காதல் என்றால்
சந்தோஷம்..!!

தோற்றவர்களுக்கு காதல் என்றால்..
கண்ணீர்..!!!

காதலிக்க தெரிந்தவர்களுக்கு
காதல் என்றால் அழகு..!!!

காதலிக்கப் படுபவர்களுக்கு ...
காதல் என்றால் சொர்க்கம்...!!

ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு...
காதல் என்றால் புன்னகை..!!!

புன்னகைக்க தெரிந்தவர்களுக்கு
காதல் என்றால் அற்ப்புதம்..!!!

அன்பு தேடுவோருக்கு
காதல் என்றால் அம்மா...!

அம்மாவை தேடுவோருக்கு..
காதல் என்றால் கடவுள்..!!

உலகின் பார்வையில்
காதல் பலவிதம்தான்...
ஆனால் எனக்கு என்றுமே..
              ..காதல் என்றால் நீ...
நீ என்றால் காதல்..!!!



                   .. உங்கள் சேவகன்..,
                                     ..laajee..,

அம்மா.!


..
 கடவுள் இல்லை என்று
யார் இங்கு சொன்னாலும்
கடவுளை நம்ப ஓரு வாய்ப்பு தந்த
கடவுள் அது அம்மா..,

அம்மா, அம்மா என்று
ஆசையாய் எத்தனைமுறை அழைத்தாலும்
பாசமாய் புன்னகை சிந்தும் ஓரு
அதிசயம் அது அம்மா.,!

அனாதைகள் என்று ஒதுக்கிய
உலகம் மறந்து உறங்கையிலே
கனவின் மீதி
யாய் கண்கலோர கண்ணீரில்
என்றும் ஆதரவாய் ஓரு சொந்தம் அது அம்மா..!!

தோல்வியால் நாம் அழுகையிலேயே மடிசாய்த்து..
உன்னால் மட்டுமே முடியும் எனசொல்லி..
நம் கண்ணீர் துடைத்தபடியாய் கண்ணீர் சிந்தும்...
கவிதை அது அம்மா..,

என்றேனும் முதியோர் இல்லம்வரும் பிள்ளைக்காய்...
அழுத மனம் முழுக்க ஆசிதந்து...
குழந்தையாய் புன்னகைத்தபடியே....
குதூகலிக்கும் குழந்தை அது அம்மா.., 


                 உங்கள் சேவகன்...
                               ..laajee..,

தனிமை பிடித்திருக்கிறது...!


...
தனிமை பிடித்திருக்கிறது
மனம் விட்டு சிரிக்க..
இதயம் திறந்து அழுக...
காற்றோடு பேச...
மழையோடு நனைய...
யாருமற்ற தனிமை பிடித்திருக்கிறது..!!!
..
பழைய நினைவுகளோடு
பயணம் செய்ய...
பூக்களின் நறுமணம் நுகர.....
அழகான பட்டாம்பூச்சி பிடிக்க..
அன்பான அம்மாவை நினைக்க...
யாருமற்ற தனிமை பிடித்திருக்கிறது..!!!
..
புன்னகைக்கும் குழந்தையை ரசிக்க...
ஆசையாய் கவிதை எழுத....
காதலின் ஆழம் அறிய...
என்னோடு துணை இருக்க...
எனக்கான தனிமை பிடித்திருக்கிறது..!!!

                                           உங்கள் சேவகன்...
                                                       ..laajee..,