Saturday, July 25, 2009

உடையும் தெய்வத்தின் குழந்தைகள் (அனாதைகள்)...




பலர் ருசி அறியும் காலத்தில்,
அவர்கள் பசி அறிகிறார்கள்!

பலர் சுகம் அறியும் காலத்தில்,
அவர்கள் சுமை அறிகிறார்கள்!

பலர் சினம் அறியும் காலத்தில்,
அவர்கள் குணம் அறிகிறார்கள்!

பலர் சோகம் அறியும் காலத்தில்,
அவர்கள் லோகம் அறிகிறார்கள்!

இப்படி அனைத்தையும் பலருக்கு முன்னமே அடைந்த அவர்களால்,
பலர் பெற்ற விலைமதிக்க முடியா..., அன்னை என்ற,
தெய்வத்தின் உடைக்கமுடியா பாசத்தை மட்டும்...

அடைய முடியாமல் உடைகிறார்கள் பல துளியாய்!!!!!!!??


(என்னுடைய இந்த 3 வது கவிதையை ஆதரவற்ற என் சகோதர, சகோதிரிகளுக்கு சமர்பிக்கிறேன்)...,


உங்கள் சேவகன்,
..laajee..,



..வீடு..!!!



தவழும் வயதிலிருந்தே...
தடுக்கி விழுந்து, எழுந்த வாசல்!!!

அன்னையின் சேலை நுனி பிடித்து
நடந்த, நடக்க பழகிய முற்றம்!!!

சகோதரமாய் சண்டையிட்டு சில அழுகை...
பல சிரிப்பு கண்ட திண்ணை!!!

புன்னகை, காதல், சோகம்...எத்தனையோ????
அத்தனை முகங்களையும் கண்ட கூடு!!!

பிரிந்து எங்கு சென்றிருந்தாலும்,
வருகையை புரிந்து குதூகலிக்கும் கோவில்!!!!

அசதியான நேரத்தில் அண்ணாந்து பார்க்கையில்
அறியும் ஓட்டை விழுந்த கூரையால்
வசதியாக வாழ கனவு கொடுத்த பள்ளி!!!!

திருமணம் முடிந்து செல்லும் மகளிர்க்காய்,
வருத்தமாய் வெறிச்சமுகம் காட்டும் சார கோபுரம்!!!!

நாம் மடிந்து போக நினைத்தாலும்
இடிந்து போகாத ஒரே சொந்தம்..
நேசம் , பாசம் மறவாத பந்தம்!!!!
அதுதான் நமக்கான வீடு!!!!!

உங்கள் சேவகன்,
..laajee..,

மரணம் கொண்ட மணங்கள் வேண்டாமே...!!!


ஒத்த புள்ள பெத்து போட்டு
நித்தம் கனவு தானும் கண்ட..
ஒத்த புருசன் போன பின்னே
புள்ள மேல உசிர வச்சி
நானும் கனவு நாலு கன்டேன்!!!

அண்ட வீடு துணி துவச்சி
ஆச்சியம்மா ஆட்ட மேச்சி
வந்த காசில் வலி மறக்க
அடுக்கு மல்லி சூடிவிட்டு
புள்ள உன்ன படிக்க வச்சேன்!!!

ஆச காட்டி அழச்ச பய
பின்ன நீயும் ஓடிபோன...!!
பாசம் தணிந்து போன பின்னே...
மோசம் போயி வந்தியடி!!

நித்தமு நீ அழுவுறத
பெத்த வயிரு தாங்கலயே..!!
தத்தி வந்து கேட்ட என்ன,
செத்து போக சொன்னியம்மா!!!!

கஞ்சி கூட குடிக்காம
நீ அழுவ நான் பார்க்க
நெஞ்சி தண்ணி வத்தி போயி.
நானும் இப்ப செத்து போறேன்...!!!

காலந்தள்ளி புத்தி வந்தா
பெத்த கனவ நனவாக்கு... அப்ப
சிரிச்ச ஊரு கண்ணு பட்டா
சுத்திபோட யாரிருக்கா...???

உங்கள் சேவகன்,
..laajee..,

வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது..!!!!




பகிராமலே மறைந்து போன
பல நேர புன்னகை..!!!

நிரம்பாமலே சுருங்கி போன.
பசித்த வயிறு..!!!

துடைக்காமலே விழுந்துவிட்ட
உடைந்த கண்ணீர்..!!!

அடுத்த நாள் நீடிக்காமலே போன
அழகாய் பார்த்த அன்பு..!!!

எழுதாமலே விட்டு போன
பிடித்த பல பெயர்கள்..!!!

சொல்லாமலே தங்கிவிட்ட
உண்மை காதல்கள்..!!!

இப்படி எதற்கும் தடைபடாமலே
நீண்ட லட்சிய பாதை..!!!

வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது!!!


உங்கள் சேவகன்,
...laajee..,

பிச்சை மனிதன்..!!





பட்டினியோடு உறங்க முயன்று....
பசியோடு அதிகாலை எழுந்து
ருசி மறந்து தன்னீர் பருகி..
பலர் வீட்டு எச்சத்தை நம்பி
இச்சையாய் ஆசை கொண்டு..
தெரியாத தாயை வாய் நிறைய கூவி
மிட்சமாய் கிடைத்ததை
மிட்சமில்லாமல் உன்ன நினைத்து...
வாலாட்டி உரசி நிற்கும் தெருவோர நாய்க்கிட்டு
நானும் உண்டதுண்டு..!!!

காலத்திற்கு பிட்சையாய்
இறந்து போகும் எனக்காய்
தினம் கண்ட தெருவும் வருந்தாது....
நான் கானா தாயும் வருந்தாது....

ஓரு வேலை அந்த நாய் வருந்தலாம்..
பசிக்கு உதவ நாதியற்ற நாட்களில்...
பிச்சை மனிதன் என்னை நினைத்து..

அன்று அது குறைக்கலாம்...
எனக்காய் ஒருமுறை...
அம்மா என்று அதன் மொழியில்..!!!!


உங்கள் சேவகன்..,
..laajee..,

ஐந்து ரூபாய் நாணயம்::



சாலையோரம் நடக்கையில் கிடைத்த ஐந்து ரூபாய் நாணயம்..,
யாரோ தொலைத்திருந்தார்கள் !!!!

அவர்களுக்கு அது காசுதான் ......ஆனால்,
கண்டெடுத்த எனக்கு அதிஷ்ட சந்தோஷம் ஆனது!!!

என் அந்த நிமிட புன்னகையில் தொலைத்தவர் வாழ்ந்திருந்தார்....
உண்மைதான் உணர்ந்தேன்!!!!

நானும் தெரிந்தே தொலைக்கிறேன் நாணயங்களை.!!

யாரேனும் புன்னகைக்க கூடும்......
அதில் நான் வாழக்கூடும்....!!

பார்க்க ஆசைதான்...
அவரின் புன்னகையை,
அதில் நான் வாழ்வதை!!!

ஒருவேளை புன்னகை பொய்த்து...
நம்பிக்கை மெய்க்காமல் போனால்???

நம்புகிறேன் தொலையும் நாணயங்கள் பிறரின் புன்னகைக்கே!!!!

நான் விட்ட நாணயம் உங்களில் யாரையேனும்....
புன்னகை படுத்தும் என்ற நம்பிக்கையில்.........,

நடக்கிறேன் திரும்பி பார்க்க மனமில்லாமல் !!!!!!
எனக்கான சந்தோஷ நாணயத்தை தேடி!!!!!!

யாரேனும் தொலைதிருப்பீர்கள் என்ற ஆசையில் !!!!



உங்கள் சேவகன்..
..laajee..,

வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது:






தன்னை மிதிபோர்க்கும் நேசத்துடன்
நறுமணத்தை பரிசளிக்கும் மலர்கள்..!!

தன் மீது மோதி விளையாடுவோர்க்கும்
திறந்து வழிகாட்டும் வெற்றி வாசல்..!!

கோபத்தை கொட்டித் தீர்ப்போருக்கும்
அழகிய புன்னகையை அன்பளிக்கும் குழந்தைகள்..!!!

வாய்ப்பை வரவேற்காமல் வசை பாடுவோர்க்கும்
வாழ வழிகாட்டும் வாழ்க்கை..!!!

தன்னை திட்டித் தீர்ப்போருக்கும்
அதிசய அறிவாய் அனுபவம் தரும் தோல்விகள்...!!!

சேர்ந்து வாழாமல் போன காதலர்களுக்கும்
கவினயமாய் கவிதை தரும் காதல்கள்..!!!

வெட்டி வீழ்த்திய மனிதர்க்கும் உண்டுமகிழ
சுவையாய் உணவுதரும் உயிர்விட்ட உயிர்கள்..!!!

தான் கிழியப்போகிறோம் என்று தெரிந்தும்
நினைவுகளை நிரம்ப கொண்டுதரும் கடித உறைகள்..!!!

தனை தள்ளி ஒதுக்கிய பிள்ளைகளுக்க்காகவும்
கடவுளிடம் கருணை கேட்க்கும் தாய்கள்..!!!

அடடா!! கோபமற்ற தருணங்களில்
வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது.....
எதிர்பாராமல் கிடைக்கும் பரிசுகள் போல..!!!

உங்கள் சேவகன்..,
..laajee..,

அம்மாவின் குரல் தேடி..,




(laajee -இன் டைரியில் அம்மா என்ற கதை தொகுப்பில் இருந்து ஒரு கதை உங்களுக்காய் உங்கள் அன்பிற்காய், அன்னையின் அற்புதம் அறிவதற்காய்..)

8 மணி நேர பயணக் களைப்பில் வந்ததும் படுத்து உறங்கி போயிருந்தேன். பயணக் களைப்பின் அழுத்தமோ என்னவோ காலை வெகு நேரம் கழித்து எழுந்தும் சற்று சோம்பலாகவே இருந்தது.கடைசி இரண்டு நாள், தொழில் நிமிர்த்த மீட்டிங்கில் மொபைலை மறந்திருந்ததால் எழுந்தவுடன் முதல் வேலையாக அதனை பெட்டியில் இருந்து எடுத்து ஆண் செய்தேன். மொபைல் அதன் முழுமையை அடைந்த உடனேயே ஒலித்ததில் தெரிந்தது யாரோ தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது. ஆர்வமாய் விடை அளிக்க செவியில் வைத்த உடனேயே எதிர்முனை பரபரப்பாக பேச ஆரம்பித்தது....

"என்னப்பா கார்த்தி, எத்தனை நாளா உனக்கு போன் பண்ணேன்.. போகவே இல்லப்பா... சரி உடனே நீ கிளம்பி ஊருக்கு வாடா.. அம்மாவுக்கு உடம்பு முடியல.. வந்து நீ ஒரு தடவ பார்த்துட்டு போயா..".. பேசியது மாமா தான். குரல் சிறிது உடைந்தே இருந்தது. எனக்கும்தான்.! "என்ன மாமா அம்மாவுக்கு என்னாச்சி? இப்ப எப்படி இருக்காங்க? மருத்துவர்ட்ட காமிச்சிங்களா? " என் அத்தனை கேள்விகளுக்கும் அவர் சொன்ன பதில் கிளம்பி வா என்பதே..

அவசர அவசரமாக விமான சீட்டு வாங்கி நாட்டை நோக்கி பயணிக்கையில் மனது முழுக்க அம்மாவின் நினைப்பே. அப்பா நான் சிறியவனாக இருந்த பொழுதே இறந்து போயிருந்ததால் எனக்கான அத்தனையும் அம்மாதான் செய்தார். காலைல வேலைக்கு போயிட்டு சாயங்காலம் தான் வருவார். அதுக்கு பிறகு பசியோடு இருக்கும் எனக்கு அவசரமா சமைச்சி போட்டுட்டு தானும் உண்ணுவார். அம்மா கஷ்ட படுறத பார்க்கிற நேரம்லாம் ரொம்ப அழுகையா வரும். இருந்தாலும் வெளி காட்டாமலே கவனமா படிச்சி கல்லூரி போனேன். அம்மா ஆசை எல்லாம் எப்படியாவது நான் ரொம்ப பெரிய ஆளா ஆயிட்டு கோட்டு சூட்டுலாம் போட்டு ஊருக்கு வரணும், எங்க ஊர்லே பெரிய மனுஷனா இருக்கணும்னு தான். அதுக்காகவே எனக்கு கிடைச்ச வெளிநாட்டு வேலைய மறுப்பேதும் சொல்லாம செய்ய சொன்னாங்க. அம்மா பட்ட கஷ்டம்லாம் போக்க எனக்கு அத்தன ஆசையா இருந்துச்சு. அத்தனையும் மனசுல வச்சிதான் ரொம்ப கஷ்ட பட்டு வேலை செஞ்சிட்டு இருக்கேன், எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்தே அம்மா நகை போட்டு நான் பார்த்ததே இல்ல. இதோ என்னோட பெட்டியில நான் ஆச ஆசையா அம்மாவுக்கு வாங்கி போற நகைகள், சேலைகள் எல்லாம்.. இதெல்லாம் பார்த்து அம்மா எப்படிலாம் சந்தோஷ படுமோ? பல கற்பனைகளோடே நாடு வந்து சேர்ந்தேன்.

விமான நிலைய வாசலிலேயே மாமா, தோழர்கள் என ஓரு கூட்டமே இருந்தார்கள் அனைவர் கண்களிலுமே நீர் தொற்றி இருந்ததுமே மனசுக்கு வலியா இருந்தது. ஆச ஆசையா மாமாவ பார்த்து கேட்டேன்! அம்மா எப்படி மாமா இருக்கு? கேள்வி முடியும் முன்னமே அவர் அழ தொடங்கி சொன்னார். "கார்த்தி , அம்மா நம்மள விட்டுட்டு போயட்டாங்கய்யா, உனக்கு போன் செய்து செய்து நீ கிடைக்கல.. நாளாகவே நாங்களே அடக்கம் பண்ணிட்டோம்பா" சொல்லிக்கொண்டே போனார்....
தெய்வமே! முதல் முறை உலகம் இருண்டது யார் பேசுவதும் கேட்க வில்லை.ஆம் அழுதேன்.. அழுதேன்.. அநேதமாக நான் அழுததை பார்த்து அந்த விமான நிலைய வாசலில் பலர் அழுதிருப்பார்கள். எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் எல்லாமே முற்று பெறாத கனவாக்கி விட்டு எப்படி அம்மா இறந்தார்? வீடு வந்து சேர்வதற்குள் கண்களில் நீர் வற்றி வலி கூடி இருந்தது.

இதோ என் அம்மா கோலமிட்ட வாசல்.. குப்பைகளின் கூடாரமாய், நான் ஆடி விளையாடிய கதவு.. அன்னையின்றி அனாதையாய் என்னை போல் உடைந்து போய்.. எத்தனை பாசமாய் பார்த்த வீடு இன்று அத்தனையும் எங்கே...? இரண்டு நாள் முழுக்க அழுகைதான்.. ஆறுதல் தந்த சொந்தங்கள் எல்லாம் சென்றிருந்தனர். பக்கத்து வீட்டு அக்கா மட்டும் உணவு கொண்டு வந்து தந்தவாறே இருந்தார். மாலை பொறுமையாக என்னருகே அமர்ந்த அக்கா பேச ஆரம்பித்தார்... "அம்மாவுக்கு ரொம்ப ஆசைடா உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு. அடிக்கடி சொல்லுவாங்க. என் புள்ள பசி தாங்க மாட்டான். இப்ப என்ன பண்ணுறானோ!? புள்ளைக்காக அரிசி பானைல நாட்டுகோழி முட்டைலாம் எடுத்து வச்சிருக்கேன். புள்ள என்னைக்கு வருமோ ! வயிறு நிறைய சாப்பிட சொல்லனும்னு சொல்லி சொல்லி ஆற்றிபோகும்டா.." அக்காவும் ஆறுதல் சொல்லி வெளியேறினார்.

நானும் கொண்டுபோன நகை, புடவை எல்லாத்தையும் அம்மா போட்டோ முன்னாடி வச்சிட்டு எழுகையில் அரிசி பானை கண்ணில் படவே திறந்து பார்த்தேன். உள்ளே அம்மா ஆச ஆசையா அடுக்கி வச்சிருந்த நாட்டு கோழி முட்டைகள்.. பார்த்ததுமே மறுபடியும் அழுகை வந்தது.. அழுகையிலே எங்கோ ஒலித்தது அம்மாவின் குரல்...
"அய்யா சாமி.. அரிசி பானைல நாட்டு கோழி முட்டை வச்சிருக்கேன்.. தினமும் காலைல குடிச்சிருயா.. அம்மா இருக்கும் போது அழாத ராசா"
முட்டையில் விழுந்த கண்ணீரை மறந்தவாறே என் அன்னையின் குரல் தேடி நகர்ந்தபடியே நான் ...

உங்கள் சேவகன்...,
..laajee..,