Thursday, September 3, 2009

நிஜத்தின் நிழலாய் கண்ணீர்..!!




முடியாமலே விடிந்த..
கனவுகளின் சுவடுகளாய்...
கன்னங்களில் கண்ணீர்..!

மொத்த வாழ்கையையும் பரிசளித்தும் ..
எட்டி உதைக்கும் பிள்ளைகளுக்காய்...
தாய்மையுடன் வேண்டிநிற்கும் கண்ணீர்..!

ரசித்த காதலையும்
பெற்றோருக்காய் துறந்து வாழ்வோரிடையே...
காதலுடன் வாழ்த்தி வாழும் கண்ணீர்..!

குழந்தையில் கிடைக்காததற்க்காய் கலங்கி...
கிடைத்ததற்க்காய் மகிழ்ந்து நிற்கையில்..
அடையாளம் அறிந்தமையாய் கண்ணீர்..!

பிரிதலின் ஆழத்திலும்...
புரிதலின் அன்பிலும், இனம் புரியாமலே..
இயல்பாய் உதிர்க்கும் கண்ணீர்..!

உலகமே வியந்து போற்றும் நமக்கான வெற்றியால்...
அன்னையின் கண்களில் மலரும்...
சந்தோஷ சலனமாய் கண்ணீர்..!

எதிர்பார்த்த வெற்றியிலும்...
எதிர்பார்க்கா ஏமாற்றத்திலும்..
எட்டிவரும் எண்ணம் புரிந்த கண்ணீர்..!

பரிச்சயமற்ற பயன நாட்களில்..
காற்றுகவரலாய் நுழைந்த தூசியால்...
நோக்கமற்ற ஏதுமாய் கண்ணீர்..!

சந்தோஷமோ, வருத்தமோ..
அமைதியோ, ஆராவாரமோ...
ஒரே சுவையில் கண்ணீர்..!
வெற்றியோ, தோல்வியோ...
வருகையோ, பிரிவோ....
ஒரே நிறத்தில் கண்ணீர்..!

சிரிக்கையில் விருப்பமாய்...
அழுகையில் வெறுப்பாய்...
பல பரிணாமங்களின் மொத்தமாய் கண்ணீர்..!

உனக்கும் எனக்கும் பொதுவாய்..
உலகம் முழுக்க உதிர்ந்தபடியாய்..
நினைவுகளின் வெளிப்பாடாய்...
நிஜங்களின் நிழலாய் கண்ணீர்...!!!

பிறக்கையிலும்,இறக்கையிலும்..
பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும்..
சுகங்களையும், சோகங்களையும்...
சுமந்தபடியே.....
என்றும் எப்போழுதுமாய்...
நமக்கான கண்ணீர்..!!!

உங்கள் சேவகன்..,
..laajee..,