Wednesday, March 17, 2010

அம்மா என்றால் தெய்வம்..!




பலவற்றை பங்கிட
பலர் கிடைத்தார்கள்..
என் பசியை பங்கிட
நீ மட்டும்தான் கிடைத்தாய்..!!



என் வாழ்கை முழுதும்
புன்னகை என்ற சொல்
எங்கெல்லாம் உண்டோ..
அங்கெல்லாம் உன் பெயர் இருக்கும்..!!



அழச்சொல்லி ரசித்த
உள்ளங்களுக்கு மத்தியில்..
சிரிக்க சொல்லி
அழுதது நீ மட்டும்தான்..!!



உலகோடு நான் கொண்ட காதலுக்கு
நான் தரும் பரிசு என் உயிர்...
உன்னோடு நான் கொண்ட காதலுக்கு
நான் தரும் பரிசு அழகு உலகம்..!!!



மரணமும் ஓரு வாய்ப்புதான்
உன் மடிதனில் நிகழ்ந்தால்..!!!


அன்றொரு நாள் எனக்காய் நீ அழுதாய்
உனக்காய் நான் அழுதேன்
நமக்காய் காதல் சிரித்தது..!!!



உனக்காய் நான் எழுதிய
ஒவ்வொரு கவிதையும்
என் கண்ணீர்பட்டு அழிந்துவிடுகிறது
புன்னகையை தாங்கியபடியே...!!!!



உன்னைகாணும் முன்புவரை
கண்ணீர்த்துளிகளை அதிகம் பார்த்த
என் டைரியின் பக்கங்களில்,
புன்னகையே வழிகிறது
உன்னை கண்ட நாள் முதல்..!!!



என் மரணத்திற்க்காய்
நீ அழுவாய் என்றால்...
அது உனக்கு தெரியாமலே
நிகழ பணிப்பேன்..!!!!



உங்கள் சேவகன்..,
                ..laajee..,

1 comment:

சுரபி said...

உன்னைகாணும் முன்புவரை
கண்ணீர்த்துளிகளை அதிகம் பார்த்த
என் டைரியின் பக்கங்களில்,
புன்னகையே வழிகிறது
உன்னை கண்ட நாள் முதல்..!!!

என் மரணத்திற்க்காய்
நீ அழுவாய் என்றால்...
அது உனக்கு தெரியாமலே
நிகழ பணிப்பேன்..!!!!

Stunning... Love can do anything...
Romba romba nallaruku...