Saturday, July 25, 2009

மரணம் கொண்ட மணங்கள் வேண்டாமே...!!!


ஒத்த புள்ள பெத்து போட்டு
நித்தம் கனவு தானும் கண்ட..
ஒத்த புருசன் போன பின்னே
புள்ள மேல உசிர வச்சி
நானும் கனவு நாலு கன்டேன்!!!

அண்ட வீடு துணி துவச்சி
ஆச்சியம்மா ஆட்ட மேச்சி
வந்த காசில் வலி மறக்க
அடுக்கு மல்லி சூடிவிட்டு
புள்ள உன்ன படிக்க வச்சேன்!!!

ஆச காட்டி அழச்ச பய
பின்ன நீயும் ஓடிபோன...!!
பாசம் தணிந்து போன பின்னே...
மோசம் போயி வந்தியடி!!

நித்தமு நீ அழுவுறத
பெத்த வயிரு தாங்கலயே..!!
தத்தி வந்து கேட்ட என்ன,
செத்து போக சொன்னியம்மா!!!!

கஞ்சி கூட குடிக்காம
நீ அழுவ நான் பார்க்க
நெஞ்சி தண்ணி வத்தி போயி.
நானும் இப்ப செத்து போறேன்...!!!

காலந்தள்ளி புத்தி வந்தா
பெத்த கனவ நனவாக்கு... அப்ப
சிரிச்ச ஊரு கண்ணு பட்டா
சுத்திபோட யாரிருக்கா...???

உங்கள் சேவகன்,
..laajee..,

No comments: