Saturday, July 25, 2009

வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது:






தன்னை மிதிபோர்க்கும் நேசத்துடன்
நறுமணத்தை பரிசளிக்கும் மலர்கள்..!!

தன் மீது மோதி விளையாடுவோர்க்கும்
திறந்து வழிகாட்டும் வெற்றி வாசல்..!!

கோபத்தை கொட்டித் தீர்ப்போருக்கும்
அழகிய புன்னகையை அன்பளிக்கும் குழந்தைகள்..!!!

வாய்ப்பை வரவேற்காமல் வசை பாடுவோர்க்கும்
வாழ வழிகாட்டும் வாழ்க்கை..!!!

தன்னை திட்டித் தீர்ப்போருக்கும்
அதிசய அறிவாய் அனுபவம் தரும் தோல்விகள்...!!!

சேர்ந்து வாழாமல் போன காதலர்களுக்கும்
கவினயமாய் கவிதை தரும் காதல்கள்..!!!

வெட்டி வீழ்த்திய மனிதர்க்கும் உண்டுமகிழ
சுவையாய் உணவுதரும் உயிர்விட்ட உயிர்கள்..!!!

தான் கிழியப்போகிறோம் என்று தெரிந்தும்
நினைவுகளை நிரம்ப கொண்டுதரும் கடித உறைகள்..!!!

தனை தள்ளி ஒதுக்கிய பிள்ளைகளுக்க்காகவும்
கடவுளிடம் கருணை கேட்க்கும் தாய்கள்..!!!

அடடா!! கோபமற்ற தருணங்களில்
வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது.....
எதிர்பாராமல் கிடைக்கும் பரிசுகள் போல..!!!

உங்கள் சேவகன்..,
..laajee..,

No comments: