Saturday, July 25, 2009

ஐந்து ரூபாய் நாணயம்::



சாலையோரம் நடக்கையில் கிடைத்த ஐந்து ரூபாய் நாணயம்..,
யாரோ தொலைத்திருந்தார்கள் !!!!

அவர்களுக்கு அது காசுதான் ......ஆனால்,
கண்டெடுத்த எனக்கு அதிஷ்ட சந்தோஷம் ஆனது!!!

என் அந்த நிமிட புன்னகையில் தொலைத்தவர் வாழ்ந்திருந்தார்....
உண்மைதான் உணர்ந்தேன்!!!!

நானும் தெரிந்தே தொலைக்கிறேன் நாணயங்களை.!!

யாரேனும் புன்னகைக்க கூடும்......
அதில் நான் வாழக்கூடும்....!!

பார்க்க ஆசைதான்...
அவரின் புன்னகையை,
அதில் நான் வாழ்வதை!!!

ஒருவேளை புன்னகை பொய்த்து...
நம்பிக்கை மெய்க்காமல் போனால்???

நம்புகிறேன் தொலையும் நாணயங்கள் பிறரின் புன்னகைக்கே!!!!

நான் விட்ட நாணயம் உங்களில் யாரையேனும்....
புன்னகை படுத்தும் என்ற நம்பிக்கையில்.........,

நடக்கிறேன் திரும்பி பார்க்க மனமில்லாமல் !!!!!!
எனக்கான சந்தோஷ நாணயத்தை தேடி!!!!!!

யாரேனும் தொலைதிருப்பீர்கள் என்ற ஆசையில் !!!!



உங்கள் சேவகன்..
..laajee..,

No comments: