Saturday, July 25, 2009

..வீடு..!!!



தவழும் வயதிலிருந்தே...
தடுக்கி விழுந்து, எழுந்த வாசல்!!!

அன்னையின் சேலை நுனி பிடித்து
நடந்த, நடக்க பழகிய முற்றம்!!!

சகோதரமாய் சண்டையிட்டு சில அழுகை...
பல சிரிப்பு கண்ட திண்ணை!!!

புன்னகை, காதல், சோகம்...எத்தனையோ????
அத்தனை முகங்களையும் கண்ட கூடு!!!

பிரிந்து எங்கு சென்றிருந்தாலும்,
வருகையை புரிந்து குதூகலிக்கும் கோவில்!!!!

அசதியான நேரத்தில் அண்ணாந்து பார்க்கையில்
அறியும் ஓட்டை விழுந்த கூரையால்
வசதியாக வாழ கனவு கொடுத்த பள்ளி!!!!

திருமணம் முடிந்து செல்லும் மகளிர்க்காய்,
வருத்தமாய் வெறிச்சமுகம் காட்டும் சார கோபுரம்!!!!

நாம் மடிந்து போக நினைத்தாலும்
இடிந்து போகாத ஒரே சொந்தம்..
நேசம் , பாசம் மறவாத பந்தம்!!!!
அதுதான் நமக்கான வீடு!!!!!

உங்கள் சேவகன்,
..laajee..,

No comments: