Saturday, July 25, 2009

பிச்சை மனிதன்..!!





பட்டினியோடு உறங்க முயன்று....
பசியோடு அதிகாலை எழுந்து
ருசி மறந்து தன்னீர் பருகி..
பலர் வீட்டு எச்சத்தை நம்பி
இச்சையாய் ஆசை கொண்டு..
தெரியாத தாயை வாய் நிறைய கூவி
மிட்சமாய் கிடைத்ததை
மிட்சமில்லாமல் உன்ன நினைத்து...
வாலாட்டி உரசி நிற்கும் தெருவோர நாய்க்கிட்டு
நானும் உண்டதுண்டு..!!!

காலத்திற்கு பிட்சையாய்
இறந்து போகும் எனக்காய்
தினம் கண்ட தெருவும் வருந்தாது....
நான் கானா தாயும் வருந்தாது....

ஓரு வேலை அந்த நாய் வருந்தலாம்..
பசிக்கு உதவ நாதியற்ற நாட்களில்...
பிச்சை மனிதன் என்னை நினைத்து..

அன்று அது குறைக்கலாம்...
எனக்காய் ஒருமுறை...
அம்மா என்று அதன் மொழியில்..!!!!


உங்கள் சேவகன்..,
..laajee..,

No comments: